அஜீத்துடன் இணைந்து நடிக்கும் சிம்பு


அஜீத்தும் சிம்புவும் புதுப்படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர். அஜீத்துடன் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்த வண்ணம் உள்ளனர். ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யா இணைந்து நடித்தார். ‘வீரம்’ படத்தில் விதார்த் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சிம்புவும் வருகிறார். இந்த படத்தை கவுதம்மேனன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்குகிறது.

அஜீத்தை சந்தித்து கவுதம்மேனன் இப்படத்தின் கதையை சொன்னபோது குறிப்பிட்ட கேரக்டரில் சிம்பு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிபாரிசு செய்தாராம். கவுதம் மேனனும் அதை ஏற்றுக்கொள்ள உடனடியாக அஜீத்தே சிம்புவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி தன்னுடன் சேர்ந்து நடிக்க அழைத்துள்ளார். நான் அஜீத் ரசிகன் என்று சிம்பு அடிக்கடி கூறிக் கொள்வது உண்டு. தற்போது அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிட்டியதும் மகிழ்ந்து போய் உடனே சம்மதம் சொல்லி விட்டார் சிம்பு.

Published In MAALAIMALAR Daily Evening Tamil News Paper Dated 10-December-2013

No comments:

Post a Comment