வேலூர் பெண்ணை மணக்கும் சிம்பு?



சென்னை: சிம்புவுக்கு வேலூரில் பெண் பார்த்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

சிம்பு வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காதல் ஜோடியாக வலம் வந்து பிரிந்துவிட்டனர். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். சிம்பு அந்த முன்னணி நடிகையை காதலிக்கிறார், இந்த நடிகையை காதலிக்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வரும். இந்நிலையில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க டி.ராஜேந்தர் முடிவு செய்தார். பெண் பார்க்கும் படலமும் வேகமாக நடந்து வருகிறது. சிம்புவுக்கு வேலூரில் ஒரு பெண்ணை பார்த்தார்களாம். பெண் பிடித்துப் போக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண் ஓகே ஆனால் இந்த ஆண்டே திருமணம் தானாம்.

 
சிம்பு முகத்தில் இப்பொழுதே புதுமாப்பிள்ளை களை வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

                                                                                        Source : One India Tamil
 

No comments:

Post a Comment